Wednesday, August 22, 2012

மனிதர்களை இறைவன் ஏன் படைத்தான்?

இணையத்தில் ஓர் இஸ்லாமியக் கட்டுரைத் தொடர் ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். அதை அரபிக் இன்ஸ்டிட்யூட் ஆஃப் காமர்சின் இயக்குனர் அஃப்ளலுல் உலமா அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில்., எழுதிக்கொண்டிருந்தார்.

அந்த கட்டுரைத் தொடரில் கீழ்கண்ட செய்தி என்னை வெகுவாகக் கவர்ந்தது.
*

மனிதனை மட்டுமல்ல, வானம், பூமி இன்னும் நம் அறிவுக்குத் தெரிந்த, தெரியாத எந்தப் படைப்புகளையும் உண்டாக்க வேண்டுமென்ற தேவை அல்லாஹ்வுக்கு இல்லை. எனினும், அவன் படைப்புகளைப் படைப்பதன் நோக்கம், அவனது வல்லமையைப் படைப்புகள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.

وما خلقت الجن والإنس الا ليعبدون
ஜின்களையும், மனிதர்களையும்
படைத்தன் நோக்கம்
அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி
வேறில்லை. (குர்-ஆன் 51:56)


மேற்கண்ட ஆயத்தில் லியஃபுதூன் என்னை வணங்குவதற்காக அன்றி என்பதை என்னை அறிந்து கொள்வதற்காகவே அன்றி என்றும் பொருள் உள்ளது என முஜாஹிது, இப்னு ஜுரைஜ் போன்ற அறிஞர்கள் கூறுகின்றார்கள்.(தஃப்ஸீர் இப்னு கஃதீர், தஃப்ஸீருல் பஃகவீ) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் லியஃரிஃபூனி – (என்னை அறிந்து கொள்வதற்காகவே அன்றி) என்று ஓதிக்காட்டினார்கள் என்றும் பல விரிவுரை நூல்களில் வந்துள்ளன. இன்னும்,

كنت كنزاً مخفياً فأحببت أن أعرف فخلقت الخلق لأعرف
நான் மறைக்கப்பட்ட புதையலாக இருந்தேன். நான் அறியப்பட வேண்டும் என்று விரும்பினேன். எனவே, நான் அறியப்படவேண்டும் என்பதற்காகப்
படைப்புகளைப் படைத்தேன் என்று அல்லாஹ் கூறினான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் குத்ஸீ ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்,
இந்த ஹதீதின் கருத்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிய விளக்கத்திற்கு ஒத்திருப்பதாகவும் அறிஞர்கள் பலர் கூறுகின்றனர். (தஃப்ஸீர் கபீர்,
தஃப்ஸீர் ஆலூஸி.)

والله الغني وانتم الفقراء
இன்னும் அல்லாஹ் எந்தத் தேவையுமற்றவன். நீங்களே அவனிடத்தில் தேவையுற்றவர்கள். (அல்குர்ஆன் 47:38)

*

இதில் ஏக இறைவன் பதித்து வைத்த பல உண்மைகள் தெளிவாவதைக் கண்டேன்.

நீ என்னை வணங்கு அதற்காகத்தான் நான் உன்னைப் படைத்தேன் வேறு எதற்காகவும் நான் உன்னைப் படைக்கவில்லை என்று கூறினால் அது வெறும் கட்டளை இடுவதாகவே படுகிறது.

தனக்கு அப்படியான ஒரு தேவை இருக்கிறது அந்தத் தேவையை நிறைவேற்றிக்கொள்ளவே நான் உன்னைப் படைத்தேன் என்று இறைவன் கூறுவதுபோல் இருக்கிறது.

இறைவனோ தேவைகளே அற்றவன்.

இறைவனின் குணம் என்று சொல்லப்படுபவையோ நிகரற்ற அன்பும் அளவற்ற அருளும் எல்லையற்ற கருணையும்தாம்.

என்னை நீ அறிந்துகொள் என்பதில் ஆழ்ந்த கருத்துள்ளது. இறைவனை அறிந்துகொள்வதென்றால் என்ன?

இறைவனின் நிகரற்ற அன்பை அறிந்துகொள்வது, இறைவனின் அளவற்றை அருளை அறிந்துகொள்வது, இறைவனின் எல்லையற்ற கருணையை அறிந்துகொள்வது. இறைவனின் பேரறிவை அறிந்துகொள்வது, இறைவன் மிகப் பெரியவன் என்று அறிந்துகொள்வது.

இறைவனின் இவை அனைத்தையும் அறிந்துகொண்டால் அவனை வணங்காமல் எப்படி இருக்க முடியும்?

இந்த அறிதலால் வரும் வணக்கம் அல்லவா உண்மையான வணக்கம். அப்படியல்லாத வணக்கம் என்பது ஏதோ கடமையே என்று செய்யும் வணக்கம் இல்லையா?

பயத்தின் அடிப்படையில்  வரும் வணக்கம் இல்லையா? அந்த வணக்கத்தில் உண்மை இருக்குமா?

சகோதரர்களே, ஏதோ வீட்டில் தொல்லை செய்கிறார்கள் என்று இறைவனை வணங்க வரும் ஒருவனின் வணக்கம் எப்படிப் பட்டதாய் இருக்கும்?

அதில் ஜீவன் இருக்குமா? அதில் ஈமான் இருக்குமா? அதில் மனம் ஒன்றுபட்ட நிலைப்பாடு இருக்குமா?

ஒரு போலி வணக்கம் இல்லையா?

இறைவனை அறிந்துகொண்டால், அதன்பின் அவனது வணக்கம் எப்படிப்பட்டதாய் இருக்கும்?

இறைவன் இந்த இரண்டில் எந்த வணக்கத்தை விரும்புவான்?

இந்த குர்-ஆன் வசனத்தின் மொழிபெயர்ப்பைக் கண்டதும் நான் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. பல இணைய தளங்களிலும் உள்ள ஆங்கில மொழி
பெயர்ப்புகளை அலசினேன். அவை அனைத்தும் ஒரே மாதிரி பொருள் கூறுபவையாக இல்லை.

1. வணங்குவதற்கே
2. சேவை செய்யவே
3. அறிவதற்கே

என்று மூன்று வகைகளாக மாறுபட்டிருந்தன.

இது தொடர்பாக எங்களுக்குள் ஓர் கருத்தாடலும் தொடங்கியது. ஒரு இஸ்லாமிய அறிஞர் வணங்குவதற்கே என்பது மட்டுமே சரி. மற்ற
இரண்டும் பிழை என்று கூறினார். ஆகவே இதற்கான விளக்கத்தை அரபு மொழியை ஐந்து வருடங்கள் படித்து அதில் சிறந்த அறிஞர் என்று பட்டமும்
பெற்ற, இந்தக் கட்டுரையை எழுதிய அகமது ஆரிஃப் அவர்களுக்குக் கடிதம் எழுதினேன். அவர் இதன் பொருட்டு அவர் செய்த ஆய்வினை எனக்கும் மறுப்புக் கூறிய இஸ்லாமிய அறிஞருக்கும் அனுப்பி வைத்தார்.

அது கீழே தரப்படுகிறது.

இந்தக் கட்டுரைக்கு அந்த இஸ்லாமிய அறிஞரோ மற்றும் இதை வாசித்த பலரோ மறுப்பேதும் கூறவில்லை. மாறாக பலரும் மிகுந்த பாராட்டை சிறந்த அறிஞர் என்று பட்டம் பெற்ற சகோதரர் அகமது ஆரிஃப் அவர்களுக்குத் தெரிவித்தார்கள்.

*

நாம் ஏன் படைக்கப் பெற்றோம்?

அஃப்ளலுல் உலமா
அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில்.
இயக்குநர், அரபிக் இன்ஸ்டிட்யூட் ஆஃப் காமர்ஸ், சென்னை-600092.

وما خلقت الجن والانس الا ليعبدون (الذاريات:56)
ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காக அன்றியே நான் படைக்கவில்லை. (தாரிய்யாத்-56)
மேற்கண்ட வசனத்தின் படி அல்லாஹ்வையே வணங்குவது மனிதர்களின் மீதும், ஜின்களின் மீதும் கடமை. ஆனால், எப்படி வணங்குவது? என்ற கேள்விக்கான பதிலை அறியாத வரையும், இன்னும், வணக்க்த்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன் தான் என்பதைப் புரிந்து அறிந்து கொள்ளாத வரையும் அவனை முறையாக வணங்குதல் இயலாது. இறைவனை வணங்குவது கடமை எனில் இறைவனை முறையாக வணங்குவது எப்படி என்று அறிதலும் கடமை தான். இறைவனை முறையாக வணங்க வேண்டும் எனில்...

அல்லாஹ் யார்?
அல்லாஹ் எப்படிப் பட்டவன்?
நமக்கும் அல்லாஹ்வுக்கும் என்ன தொடர்பு?
அல்லாஹ்வை மட்டுமே ஏன் வணங்க வேண்டும்?
அல்லாஹ்வை எப்படி வணங்கவேண்டும்?
அல்லாஹ்வை வணங்கினால் என்ன நன்மை?
அல்லாஹ்வை வணங்காவிட்டால் என்ன தீமை?
உண்மையான வணக்கம் எது?
அவ்வணக்கத்தின் தத்துவம் என்ன?
அல்லாஹ் படைத்தன் நோக்கம் வணக்கத்திற்காக எனில்,
வணக்கத்தின் மூலம் மனிதர்களும், ஜின்களும்
அடைந்து கொள்ளும் இறுதி நோக்கம் என்ன?
சுவர்க்கத்தை அடையப் பெறுவதா?
நரகில் இருந்து பாதுகாப்புப் பெறுவதா?
அவனைப் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்வதா?
அவனது காட்சியைப் பெற்றுக் கொள்வதா?
சுவர்க்கத்தின் மீது ஆசைப்பட்டும்,
நரகத்திலிருந்து காவல் பெறவும் மட்டும்
புரியப்படும் வணக்கம் தூய்மையான வணக்கமா?
அல்லது அல்லாஹ்வை மட்டுமே நாடி,
அதன் மூலம் அவனது பொருத்தத்தையும்,
அவனைப் பற்றிய அறிவையும், காட்சியையும்
பெறுவதற்காகவும் புரியப்படும் வணக்கம்
அதனை விடத் தூய்மையான வணக்கமா?

இதுபோன்ற கேள்விகளுக்கு விடைகளை அறிந்து கொள்ளா விட்டால் அவனை எப்படி முறையாக உணர்ந்து வணங்க முடியும்? அவனது வணக்கத்தில் கிடைக்கும் இன்பங்களையும், சுவைகளை எப்படி உணர முடியும்?

இவ்விளக்கத்தினை, இறைமறையின் வேறு பல வசனங்களை ஆராய்வதன் மூலம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ் மனித இனத்தை இப்பூமியில் படைக்க நாடியபோது நடந்த நிகழ்வுகளை அவனது இறைமறையில் இவ்வாறு கூறுகின்றான்...

وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ ۖ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ )البقرة:30)
“பூமியில் ஓர் பிரதிநிதியை ஆக்கப் போகிறேன்” என்று உமது இரட்சகன் வானவர்களிடம் கூறிய போது, அவர்கள், “அதில் குழப்பம் விளைவித்து, இரத்தத்தை ஓட்டக் கூடியவரையா நீ உண்டாக்கப் போகிறாய்? நாங்கள் உனது புகழைக் கொண்டு உன்னைத் துதித்துக் கொண்டும், தூய்மைப் படுத்திக் கொண்டும் இருக்கின்றோமே?” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ் “நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்” என்று கூறினான். (அல்குர்ஆன் 2:30)

மேற்கண்ட வசனத்தில் மலக்குகள் உனது புகழைக் கொண்டு உன்னைத் துதித்துக் கொண்டும், உன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டும் இருக்கின்றோமே என்று கூறியதில் இருந்து, அவர்கள் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டுதான் இருந்தார்கள் என்று விளங்குகின்றது. இருப்பினும், அல்லாஹ், அவர்களின் வணக்கத்தை விட உயர்வான ஓர் வணக்கத்தைப் புரியக் கூடிய மனித இனத்தைப் படைக்க நாடினான் என்றும் விளங்குகின்றது. மலக்குகளின் வணக்கத்தை விட உயர்வான ஓரு வணக்கத்தை நாடியே ஜின்களையும் அல்லாஹ் படைத்தான். அவர்கள், அத்தகைய வணக்கத்தைப் புரியாததால், அவர்களுக்குப் பதிலாக மனித இனத்தைப் படைக்க நாடினான் என்பதும் விளங்குகின்றது.

وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَٰؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ )البقرة:31)
“அதுமட்டுமின்றி, அந்த முதல் மனிதருக்கு அனைத்துப் (படைப்புகளின்) பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். அதன் பின்னர், அவற்றை வானவர்களின் முன்னர் நிறுத்தி, ‘நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின், இவற்றின் பெயர்களைக் கூறுங்கள்’ என்றான். (அல்குர்ஆன் 2:31)

அதாவது, அல்லாஹ் மலக்குகளை நோக்கி, “நாங்கள் உன்னை வணங்கிக் கொண்டு தான் இருக்கின்றோம் என்று நீங்கள் கூறுவது உண்மையாக இருப்பின், இவற்றின் பெயர்களையும் கூறுங்கள்”, என்று கூறுகின்றான்.

قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا ۖ إِنَّكَ أَنتَ الْعَلِيمُ الْحَكِيمُ (البقرة:32)
قَالَ يَا آدَمُ أَنبِئْهُم بِأَسْمَائِهِمْ ۖ فَلَمَّا أَنبَأَهُم بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُل لَّكُمْ إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنتُمْ تَكْتُمُونَ (البقرة:33)

அவ்வானவர்கள், ‘இறைவனே, நீ மிக்க தூய்மையானவன். நீ கற்றுத் தந்ததைத் தவிர வேறு எந்த அறிவும் எங்களுக்கு இல்லை. நிச்சயமாக, நீயே மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனுமாகவும் இருக்கிறாய்’ என்றனர். (அல்லாஹ்,) ‘ஆதமே, இவற்றின் பெயர்களை நீர் இவர்களுக்குக் கூறும்’ என்றான். அவர் அவற்றின் பெயர்களை அவர்களிடம் கூறியதும், ‘நான் வானங்கள் மற்றும் பூமியின் மறைவான விஷயங்கள் அனைத்தையும் அறிவேன் என்றும், நீங்கள் வெளியாக்கி வைப்பதையும், நீங்கள் மறைத்து வைப்பதையும் நான் அறிவேன் என்று உங்களுக்குக் கூறவில்லையா?’ என்று அல்லாஹ் கூறினான்.” (அல்குர்ஆன் 2:32,33)

மேற்கண்ட வசனத்தில், அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த அறிவுகளை மலக்குமார்களின் முன்னர் எடுத்துரைக்குமாறு கூறுகின்றான். ஆதம் (அலை) அவர்கள் அவற்றைக் கூறியதும், மலக்குகளது வணக்கத்தை விட, அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுக்குக் கொடுத்த அறிவின் மேன்மையை அவர்களுக்கு விளக்குகின்றான்.

وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَىٰ وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ (البقرة:34)
மேலும், மலக்குகளை நோக்கி, ஆதமுக்கு சிரம் தாழ்த்துங்கள் என்று கூறியபோது, அவர்கள் அனைவரும் சிரம் தாழ்த்தினார்கள், இப்லீஸைத் தவிர. அவன் மறுத்தான், இன்னும் பெருமை கொண்டான். எனவே, நிராகரிப்போரில் ஒருவனாக ஆகி விட்டான். (அல்குர்ஆன் 2:34)


ஆதம் (அலை) அவர்களுக்கு சிரம் பணியுங்கள் என்று அல்லாஹ் கூறியபோது, மலக்குகள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்யாத தன்மையில் படைக்கப்பட்டவர்கள் ஆதலால், உடனே, சிரம் பணிந்து விட்டனர். ஆனால், தனது வணக்கங்களினால் மலக்குகளுக்கே தலைவனாக ஆக்கப்பட்டிருந்த இப்லீஸ், இவ்வளவு காலமும் அல்லாஹ்வுக்கே சிரம் பணிந்து வணங்கிக் கொண்டிருந்த மலக்குகளை நோக்கி, ஆதம் (அலை) அவர்களுக்கு சிரம் பணியுங்கள் என்று அல்லாஹ்வே கூறிய அக்கட்டளையின் மறைந்து இருந்த உண்மைத் தத்துவத்தை இப்லீஸ் அறிந்திருக்கவில்லை. அதை அறிய முயற்சிக்கவும் இல்லை. பெருமை பாராட்டினான். எனவே, அவன் இவ்வளவு காலமும் புரிந்திருந்த வணக்கங்களின் மூலம் அவன் பெற்றிருந்த பதவியை விட்டும் நீக்கப்பட்டு, இறைவனது அருளை விட்டும் தூரமாக்கப்பட்டு, நிராகரிப்போரில் ஒருவனாக ஆகி விட்டான், என்று அல்லாஹ் விளக்குகின்றான்.

மேற்கண்ட இறைவசனங்களில் இருந்து தெளிவாகும் கருத்து என்னவெனில், மலக்குகளின் வணக்கத்திற்கும், ஷைத்தானுடைய வணக்கத்திற்கும், ஆதம் (அலை) அவர்களும், அவர்களது சந்ததியினரும், அல்லாஹ் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த அறிவின் அடிப்படையில் புரியும் வணக்கத்திற்கும் வானிற்கும் பூமிக்கும் உள்ள இடைவெளி உண்டு என்பது தான்.

இல்லையெனில்,

قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ [ الزمر: 9 ].
அறிந்தவர்களும், அறியாதவர்களும் சமமாவார்களா? (அல்குர்ஆன் 39:9)

يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ [ المجادلة: 11 ]
நம்பிக்கை கொண்டோருக்கும், அறிவைக் கொடுக்கப் பட்டோருக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துகின்றான். (அல்குர்ஆன் - 58:11)

|وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا َقَالا الْحَمْدُ لِلَّهِ الَّذِي فَضَّلَنَا عَلَى كَثِيرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِينَ (النمل:15)
நாம் தாவூதுக்கும், சுலைமானுக்கும் அறிவைக் கொடுத்தோம். அவர்கள் இருவரும், தனது இறைநம்பிக்கை கொண்ட அடியார்களில் அநேகரை விட எங்களை மேன்மையாக்கி வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், என்று கூறினர். (அல்குர்ஆன் 27:15)

اِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ [الفاطر:28].
நிச்சயமாக, அவனை வணங்குவோரில், அறிந்தோர் தாம்,
அல்லாஹ்வை மிகவும் அஞ்சுகின்றனர். (அல்குர்ஆன் 35:28)

போன்ற இறைவசனங்கள் எதனை உணர்த்துகின்றன?


அதுமட்டுமின்றி,
كَمَا أَرْسَلْنَا فِيكُمْ رَسُولًا مِّنكُمْ يَتْلُو عَلَيْكُمْ آيَاتِنَا وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ (البقرة:151)
அவ்வாறே, உங்களுக்கு நம்முடைய வசனங்களை ஓதிக் காண்பித்து உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், உங்களுக்கு வேதத்தையும், (அவற்றிலுள்ள) ஞானங்களையும் கற்பித்து, நீங்களறியாத மற்றவற்றையும் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் கூடிய ஒரு தூதரை உங்களிலிருந்தே உங்களுக்கிடையில் நாம் அனுப்பிவைத்தோம். (அல்பகரா-151)

என்ற இறைவசனம் இறைவனை முறையாக வணங்கி வழிபடுவது எப்படி என்பது பற்றிய அறிவைக் கற்றுக்கொடுப்பதற்காகவே அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களை நம்மிடம் அனுப்பி வைத்தான் என்று விளக்குகின்றது.

மேலும், திருக்குர்ஆனின் முதல் அத்தியாயம் சூரத்துல் ஃபாத்திஹாவில்,
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

நாங்கள் உன்னையே வணங்குகின்றோம், உன்னிடத்திலேயே உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக. அது நீ அருள்புரிந்தாயே அவர்களது வழி. நீ எவர் மீது கோபப்பட்டாயோ, இன்னும் எவர்கள் வழிதவறிவிட்டார்களோ, அவர்களது வழியல்ல. (அல்குர்ஆன் 1:6-7)

எனும் வசனங்களில் முதலில் உன்னையே வணங்குகின்றோம் என்று உறுதி கூறச் சொல்கின்றான். அதன்பின், அவனது வணக்கத்தை முறையாக நிறைவேற்றும் நேரான வழியைக் கேட்குமாறு பணிக்கின்றான். இவ்வாறு அல்லாஹ்வே அவனை முறையாக வணங்க உதவும் நேரான வழியைப் பற்றிய அறிவை அவனிடமே கேட்குமாறு நமக்குக் கற்றுத் தருகின்றான்.


இன்னும், அல்லாஹ்வைப் பற்றிய அறிவுடன் அவனை வணங்குவது, அவனை வெறுமனே தானியங்கி இயந்திரம் போன்று வணங்குவதை விட உயர்ந்தது என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் கூறிய பொன்மொழிகளும் உணர்த்துகின்றன.

وفى " الصحيحين " من حديث معاوية بن أبى سفيان رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول: " من يرد
الله به خيرا يفقهه في الدين ".

எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ, அவருக்கு அல்லாஹ் மார்க்கத்தில் தேர்ச்சியாக்குகின்றான், என்று ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் முஆவியா இப்னு அபீ சுஃப்யான் (ரலி), நூல்-புகாரி, முஸ்லிம்.

وعن أبى أمامة رضي الله عنه قال: ذكر لرسول الله صلى الله عليه وآله وسلم رجلان: أحدهما: عابد، والآخر: عالم، فقال رسول الله صلى الله عليه وآله وسلم: " فضل العالم على العابد كفضلى على أدناكم "، ثم قال رسول الله صلى الله عليه وآله وسلم: " إن الله وملائكته، وأهل السموات والأرض، حتى النملة في جحرها، وحتى الحوت ليصلون على معلمي الناس الخير " رواه الترمذي وقال: حديث حسن صحيح.

நபி (ஸல்) அவர்களிடம் இரண்டு மனிதர்களைப் பற்றிக் கூறப்பட்டது. அவர்களில் ஒருவர், வணக்கவாளி இன்னொருவர், அறிஞர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அறிஞருக்கு வணக்கவாளியை விட இருக்கும் சிறப்பு உங்களில் மிகவும் கடைநிலைப் படித்தரத்தில் இருப்பவரை விட எனக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும்” என்று கூறிவிட்டு, “நிச்சயமாக அல்லாஹ்வும், அவனது மலக்குமார்களும், வானத்திலும், பூமியிலும் உள்ளோரும், இன்னும் புற்றில் இருக்கும் எறும்பும் கூட, மீனும் கூட, மக்களுக்கு நன்மையைக் கற்றுத்தருவோரின் ஸலவாத் கூறுகின்றனர்”, என்று கூறினார்கள். அறிவிப்பவர்-அபூஉமாமா (ரலி) நூல்-திர்மிதீ எண்-2685

إن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب، وإن العلماء ورثة الأنبياء، وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما، وإنما ورثوا العلم، فمن أخذ به أخذ بحظ وافر. رواه ابن ماجه عن ابي الدرداء.

“ஒரு வணக்கவாளியை விட அறிஞருக்கு உரிய சிறப்பு, நட்சத்திரங்கள் அனைத்தையும் விட பௌர்ணமி நிலவுக்குரிய சிறப்பைப் போன்றதாகும். நிச்சயமாக, அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகள். நபிமார்கள் தீனாரையோ, திர்ஹமையோ வாரிசுப் பொருளாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள், அறிவையே வாரிசாக விட்டுச் சென்றுள்ளனர். எவர், அதனை எடுத்துக் கொண்டாரோ, அவர் மிகப் பெரும் அதிஷ்டத்தையே எடுத்துக் கொண்டார்” என்று நபி (ஸல்) கூறியதாக அபுத் தர்தா (ரலி) அறிக்கிறார்கள். (நூல் இப்னு மாஜா எண்-3160)

மேற்கண்ட இறைவசனங்களும், நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும், இறைவனை வெறுமனே வணங்குவதை விட அவனைப் பற்றிய, அவனது வணக்கம் பற்றிய அறிவுகளைப் பெறுவதன் முக்கியத்துவத்தையும், சிறப்பையும் உணர்த்துகின்றன.


மேற்கண்ட ஆயத்தில் லியஃபுதூன் என்னை வணங்குவதற்காக அன்றி என்பதற் என்னை அறிந்து கொள்வதற்காகவே அன்றி என்றும் பொருள் உள்ளது என முஜாஹிது, இப்னு ஜுரைஜ் போன்ற அறிஞர்கள் கூறுகின்றார்கள்.(தஃப்ஸீர் இப்னு கஃதீர், தஃப்ஸீருல் பஃகவீ) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் லியஃரிஃபூனி – (என்னை அறிந்து கொள்வதற்காகவே அன்றி) என்று ஓதிக்காட்டினார்கள் என்றும் பல விரிவுரை நூல்களில் வந்துள்ளன. இன்னும்,

كنت كنزاً مخفياً فأحببت أن أعرف فخلقت الخلق لأعرف
நான் மறைக்கப்பட்ட புதையலாக இருந்தேன். நான் அறியப்பட வேண்டும் என்று விரும்பினேன். எனவே, நான் அறியப்படவேண்டும் என்பதற்காகப் படைப்புகளைப் படைத்தேன் என்று அல்லாஹ் கூறினான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் குத்ஸீ ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஹதீதின் கருத்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிய விளக்கத்திற்கு ஒத்திருப்பதாகவும் அறிஞர்கள் பலர் கூறுகின்றனர். (தஃப்ஸீர் கபீர், தஃப்ஸீர் ஆலூஸி.)

குர்ஆனில் லியஃபுதூன் என்று வந்திருக்கும்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எவ்வாறு அதற்கு மாற்றமாக லியஃரிஃபூன் என்று ஓத முடியும் என்று சிலருக்கு ஐயம் ஏற்படுகின்றது.

இறைமறை அல்குர்ஆனை ஓதும் கிராஅத் முறைகள் பல உள்ளன. இவற்றில், 1.அல் கிராஅத்துல் முதவாத்திரஹ் மக்களிடையே புழக்கத்தில் ஓதப்படும் கிராஅத் 2. அல்கிராஅத்துஷ் ஷாஃத்ஃதஹ் – அரிதாக ஓதப்படும் கிராஅத் என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த அனைத்து வகைக் கிராஅத்துகளுமே நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு ஓதிக்காட்டியது தான். இதை ஹதீதில் வரும் கீழ்க்கண்ட நிகழ்ச்சி உறுதி செய்கின்றது.

قَالَ: سَمِعْتُ هِشَامَ بْنَ حَكِيمِ بْنِ حِزَامٍ يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ فِي حَيَاةِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، فَاسْتَمَعْتُ لِقِرَاءتِهِ، فَإِذَا هُوَ يَقْرَأُ عَلَى حُرُوفٍ كَثِيرَةٍ لَمْ يُقْرِئْنِيهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ، فَكِدْتُ أُسَاوِرُهُ فِي الصَّلاةِ، فَتَصَبَّرْتُ حَتَّى سَلَّمَ، فَلَبَّبْتُهُ بِرِدَائِهِ، فَقُلْتُ: مَنْ أَقْرَأَكَ هَذِهِ السُّورَةَ الَّتِي سَمِعْتُكَ تَقْرَأُ؟ قَالَ: أَقْرَأَنِيهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ، فَقُلْتُ: كَذَبْتَ، فَإِنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَدْ أَقْرَأَنِيهَا عَلَى غَيْرِ مَا قَرَأْتَ. فَانْطَلَقْتُ بِهِ أَقُودُهُ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم ، فَقُلْتُ: إِنِّي سَمِعْتُ هَذَا يَقْرَأُ بِسُورَةِ الْفُرْقَانِ عَلَى حُرُوفٍ لَمْ تُقْرِئْنِيهَا، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: أَرْسِلْهُ. اقْرَأْ يَا هِشَامُ. فَقَرَأَ عَلَيْهِ الْقِرَاءةَ الَّتِي سَمِعْتُهُ يَقْرَأُ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: كَذَلِكَ أُنْزِلَتْ، ثُمَّ قَالَ: اقْرَأْ يَا عُمَرُ، فَقَرَأْتُ الْقِرَاءةَ الَّتِي أَقْرَأَنِي، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: كَذَلِكَ أُنْزِلَتْ. إِنَّ هَذَا الْقُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ، فَاقْرؤُوا مَا تَيَسَّرَ مِنْهُ.

ஹிஷாம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் ஸூரத்துல் ஃபுர்கானை ஓதுவதை நான் கேட்டேன். ஆனால், அவர் நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஓதிக்காட்டியிராத பல வார்த்தைகளை ஓதினார். அவரைத் தொழுகையிலேயே தாவிப் பிடித்து நிறுத்த வேண்டும் என்று எண்ணினேன். இருப்பினும் அவர் ஸலாம் கொடுக்கும் வரை நான் பொறுமையுடன் இருந்து, அவர் தொழுகையை முடித்ததும் அவரது உடையைப் பிடித்துக் கொண்டு, இப்போது நீர் ஓதக் கேட்டேனே, இந்த ஸூராவை உமக்கு இவ்வாறு ஓதிக் கொடுத்தது யார்? என்று கேட்டேன். அதற்கவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தான் எனக்கு ஓதிக் கொடுத்தார்கள், என்றார். நான், நீர் பொய்யுரைக்கிறீர், ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் எனக்கு இந்த ஸூராவை வேறு முறையில் அல்லவா ஓதிக் கொடுத்தார்கள், என்று கூறினேன். அதன்பின் அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துக் கொண்டு சென்று, இவர் நீங்கள் ஃபுர்கான் ஸூராவை எனக்கு நீங்கள் கற்றுத் தராத முறையில் ஓதுகின்றார், என்றேன். நபி (ஸல்), அவரை விடுங்கள், ஹிஷாமே, நீர் ஓதும், என்றார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் நான் அவர் எவ்வாறு ஓதக் கேட்டேனோ, அவ்வாறு ஓதிக் காட்டினார். அதனைக் கேட்ட ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள், இப்படித்தான் இறங்கப் பெற்றது, என்றார்கள். பின்னர், என்னிடம், உமர், நீர் ஓதும் என்று கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஓதிக் கொடுத்தவாறு ஓதிக் காட்டினேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், இப்படியும் இறக்கப்பட்டது, நிச்சயமாக இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் இறக்கப்பெற்றுள்ளது. நீங்கள் எதனை எளிதாகக் காணுகின்றீர்களோ, அதனை ஓதுங்கள், என்றார்கள். (அறிவிப்பவர் – உமர் (ரலி) நூல்-புகாரி எண்.. 4635. இதே ஹதீது சில வார்த்தைகள் மாற்றங்களுடன் ஸஹீஹ் முஸ்லிம் நூலிலும் வருகின்றது எண் 1717)

حدثنا محمد بن عبيد الله أبو ثابت حدثنا إبراهيم بن سعد عن ابن شهاب عن عبيد بن السباق عن زيد بن ثابت قال بعث إلي أبو بكر لمقتل أهل اليمامة وعنده عمر فقال أبو بكر إن عمر أتاني فقال إن القتل قد استحر يوم اليمامة بقراء القرآن وإني أخشى أن يستحر القتل بقراء القرآن في المواطن كلها فيذهب قرآن كثير وإني أرى أن تأمر بجمع القرآن قلت كيف أفعل شيئا لم يفعله رسول الله صلى الله عليه وسلم فقال عمر هو والله خير فلم يزل عمر يراجعني في ذلك حتى شرح الله صدري للذي شرح له صدر عمر ورأيت في ذلك الذي رأى عمر قال زيد قال أبو بكر وإنك رجل شاب عاقل لا نتهمك قد كنت تكتب الوحي لرسول الله صلى الله عليه وسلم فتتبع القرآن فاجمعه قال زيد فوالله لو كلفني نقل جبل من الجبال ما كان بأثقل علي مما كلفني من جمع القرآن قلت كيف تفعلان شيئا لم يفعله رسول الله صلى الله عليه وسلم قال أبو بكر هو والله خير فلم يزل يحث مراجعتي حتى شرح الله صدري للذي شرح الله له صدر أبي بكر وعمر ورأيت في ذلك الذي رأيا فتتبعت القرآن أجمعه من العسب والرقاع واللخاف وصدور الرجال فوجدت في آخر سورة التوبة لقد جاءكم رسول من أنفسكم إلى آخرها مع خزيمة أو أبي خزيمة فألحقتها في سورتها وكانت الصحف عند أبي بكر حياته حتى توفاه الله عز وجل ثم عند عمر حياته حتى توفاه الله ثم عند حفصة بنت عمر

அபூபக்கர் (ரலி) அவர்கள் யமாமா போரில் அதிகமான ஸஹாபிகள் கொல்லப்பட்டது பற்றி எனக்குச் செய்தி அனுப்பினர். அப்போது அவர்களுடன் உமர் (ரலி) அவர்கள் இருந்தனர். அச்செய்தியில், அபூபக்ர் (ரலி) அவர்கள், “உமர் (ரலி) என்னிடம் வந்தார்கள். நிச்சயமாக, யமாமாப் போர் தினத்தன்று அதிகமான குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிள்கள் பலர் ஷஹீதாகி விட்டனர். இன்னும், பல இடங்களில் இருக்கும் ஹாஃபிள்கள் போரினால் கொல்லப்பட்டு விடுவார்களோ என்று எனக்கு அச்சமாக உள்ளது. அப்படி நடந்தால், அதிகமான குர்ஆன்கள் நம்மிடம் இருந்து போய் விடும். எனவே, நீங்கள் குர்ஆனை ஒன்று சேர்ப்பது பற்றிக் கட்டளை பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதர் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வது” என்றேன். அதற்கு, உமர் (ரலி) அவர்கள் . அதற்கு “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அது நன்மையான விஷயம் ஆகும்” என்றார்கள். இவ்விஷயத்தை உமர் (ரலி) அவர்கள் என்னுடன் அடிக்கடி கூறிக் கொண்டு வந்தார்கள். உமர் (ரலி) அவர்களது உள்ளத்தில் எவ்விஷயத்தைத் தெளிவு படுத்தினானோ, அவ்விஷயத்தை எனது உள்ளத்திலும் விளக்கி விட்டான். எனவே, உமர் (ரலி) அவர்களது கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன். நிச்சயமாக, நீர் அறிவு மிக்க இளைஞனாக இருக்கின்றீர். உம்மை நாங்கள் சந்தேகப் படவில்லை. இன்னும், நபி (ஸல்) அவர்களது வஹ்யை எழுதிக் கொண்டும் இருந்தீர். எனவே, நீர் குர்ஆனைச் சேகரிப்பீராக”, என்று கூறினர். அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அபூபக்கர் (ரலி) அவர்கள் ஒரு மலையை நகர்த்துமாறு கூறியிருந்தாலும், அது குர்ஆனைச் சேகரிக்குமாறு என்னிடம் கூறியதை விடக் கடினமான ஒன்றாக இருந்திருக்காது. நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் ஏன் செய்கிறீர்கள்?”, என்று கேட்டேன். அதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக அது நன்மையான ஒன்றாகும்”, என்றார்கள். அபூபக்ரு (ரலி) அவர்கள், இவ்விஷயத்தைப் பற்றி என்னிடம் அடிக்கடிப் பேசி வந்தார்கள். அபூபக்ரு, உமர் (ரலி) ஆகியோரது உள்ளத்தில் அல்லாஹ் கொடுத்த விளக்கத்தை என்னுடைய உள்ளத்திலும் கொடுத்தான். அதன்பின் நான் ஸஹாபாக்கள் தோல்கள், எலும்புகள், உடைந்த களிமண் துண்டுகள், பேரீச்ச மரப்பட்டைகள் போன்றவற்றில் எழுதி வைத்திருந்த, இன்னும் தங்களின் உள்ளங்களில் மனனம் செய்து வைத்திருந்தவற்றில் இருந்து குர்ஆனை சேகரிக்கும் பணியினைத் தொடர ஆரம்பித்தேன். அப்போது, ஸூரத்துத் தவ்பாவின் இறுதி ஆயத்தான லகத் ஜாஅகும் ரசூலுன் மின் அன்ஃபுஸிகும் என்ற வசனத்தை குஸைமா அல்லது அபூ குஸைமா என்ற நபித்தோழரிடம் நான் கண்டு, அதனை அந்த வசனத்தை அதற்குரிய சூராவில் சேர்த்தேன். இவ்வாறு நான் தொகுத்துக் கொடுத்த குர்ஆனின் பிரதி அபூபக்ரு (ரலி) அவர்களிடம் இருந்தது. அவர்களை அல்லாஹ் மரணிக்கச் செய்ததன் பின்னர், அது உமர் (ரலி) அவர்களிடம் இருந்தது. அல்லாஹ் அவர்களை மரணிக்கச் செய்த பின் அது உமர் (ரலி) அவர்களின் மகளார் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் இருந்தது. அறிவிப்பவர் ஜைது இப்னு ஃதாபித் (ரலி) நூல் புகாரி-6768.


இவ்வாறு அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), ஜைது இப்னு ஃதாபித் (ரலி) அவர்கள் மூவரும் ஆலோசனை செய்து குர்ஆனின் பிரதியைத் தொகுத்தார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை ஸஹாபாக்களுக்கு ஓதிக் கொடுத்த கிராஅத் முறைகளின் படி அந்தந்த ஸஹாபிகள் ஓதி வந்தார்கள்.

இதன்பின் உதுமான் (ரலி) அவர்கள் காலத்தில் இன்னும் இஸ்லாமியப் பேரரசு விரிவடைந்த காலத்தில் அர்மீனிய்யா, அதர்பைஜான் போன்ற பகுதிகள் வெற்றி கொள்ளப்பட்டன. அப்போது மீண்டும் ஒரு முறை புதிதாகக் குர்ஆனைத் தொகுக்கும் ஓரு அத்தியாவசியம் உண்டாயிற்று. அது என்னவெனில்...

وعن زيد بن ثابت أنَّ حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ قَدِمَ مِنْ غَزْوَةٍ غَزَاهَا، فَلَمْ يَدْخُلْ بَيْتَهُ حَتَّى أَتَى عُثْمَانَ، فَقَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، أَدْرِكْ النَّاسَ! فَقَالَ عُثْمَانُ: وَمَا ذَاكَ؟ قَالَ : غَزَوْت فَرْجَ أَرْمِينِيَةَ، فَحَضَرَهَا أَهْلُ الْعِرَاقِ وَأَهْلُ الشَّامِ، فَإِذَا أَهْلُ الشَّامِ يقرؤون بِقِرَاءةِ أُبَيٍّ، فَيَأْتُونَ بِمَا لَمْ يَسْمَعْ أَهْلُ الْعِرَاقِ، فَيُكَفِّرُهُمْ أَهْلُ الْعِرَاقِ، وَإِذَا أَهْلُ الْعِرَاقِ يقرؤون بِقِرَاءةِ ابْنِ مَسْعُودٍ، فَيَأْتُونَ بِمَا لَمْ يَسْمَعْ أَهْلُ الشَّامِ، فَيُكَفِّرُهُمْ أَهْلُ الشَّامِ. قَالَ زَيْدٌ: فَأَمَرَنِي عُثْمَانُ أَنْ أَكْتُبَ لَهُ مُصْحَفًا.

ஹுதைஃபத்துல் யமானீ (ரலி) அவர்கள் ஒரு யுத்தகளத்தில் இருந்து திரும்பி வந்தார்கள். தமது வீட்டிற்குச் செல்லாமல் நேராக உதுமான் (ரலி) அவர்களிடம் வந்து, அமீருல் முஃமினீன் அவர்களே, மக்களைப் புரிந்துகொள்ளுங்கள், என்றார்கள். உதுமான் (ரலி) அவர்கள், என்ன செய்தி? என்று கேட்டார்கள். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், நான் அர்மீனியப் பிரதேசத்தில் நடந்த போரில் கலந்து கொண்டு வந்துள்ளேன். அதில் ஈராக் நாட்டைச் சார்ந்த முஸ்லிம்களும், ஷாம் நாட்டைச் சார்ந்த முஸ்லிம்களும் கலந்து கொண்டனர். ஷாம் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம்களோ, உபை இப்னு கஅப் (ரலி) அவர்களது கிராஅத்தைப் பின்பற்றிக் குர்ஆன் ஓதுகிறார்கள். ஈராக் நாட்டைச் சார்ந்தவர்கள் கேட்காத முறைப்படி அவர்கள் ஓதுகின்றார்கள். எனவே, ஈராக் நாட்டுக் காரர்கள் ஷாம் நாட்டினர் ஓதும் முறையை மறுத்துரைக்கிறார்கள். ஈராக் நாட்டைச் சார்ந்தவர்களோ இப்னு மஸ்ஊது (ரலி) அவர்களது கிராஅத் முறைப்படி ஓதுகின்றார்கள். ஷாம் நாட்டினர் கேட்டிராத முறையில் அவர்கள் குர்ஆன் ஓதுகின்றார்கள். எனவே, ஷாம் நாட்டினர் ஈராக் நாட்டினர் குர்ஆன் ஓதும் முறையை மறுக்கிறாக்ள், என்று கூறினார்கள். அப்போது, உதுமான் (ரலி) அவர்கள் என்னிட்ம் அவர்களுக்காகக் குர்ஆனை எழுதித்தருமாறு கட்டளை இட்டார்கள். (அறிவிப்பவர் ஜைது இப்னு ஃதாபித் ரலி நூல் ஜாமிஉல் குர்ஆன் லி தஃவீலி ஆயில் குர்ஆன், இமாம் தபரீ)

உதுமான் (ரலி) அவர்கள் ஹுதைஃபத்துல் யமானீ (ரலி) அவர்களின் முறையீட்டின் பின்னர் தொகுக்குமாறு ஜைது இப்னு ஃதாபித் (ரலி) அவர்களிடம் பணித்தது அப்போது ஸஹாபாக்கள் ஓதி வந்த பல்வேறு கிராஅத் முறைகளை. முன்னர் அபூபக்கர் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களது கருத்தின் படித் தொகுக்கச் சொன்னது குர்ஆனின் வசனங்களை.

உதுமான் (ரலி) அவர்கள் காலத்தில் குர்ஆன் தொகுக்கப்பட்ட பொழுது பல விதமான கிராஅத் முறைகளால் மக்கள் குழப்பமடைந்து விடாமல் இருப்பதற்காக அவற்றில் புழக்கமாக மக்கள் ஓதும் வகையின் படி அமைந்த கிராஅத்துகளின் படி குர்ஆன் தொகுக்கப்பட்டது. அனைத்து வகைக் கிராஅத்துகளிலிருந்தும் பத்து வகைக் கிராஅத்துகள் தொகுக்கப்பட்டன. இவை ‘அல்கிராஅத்துல் முத்தவாத்திரஹ்’ என்று கூறப்படும்.


இந்தப் பத்து வகை கிராஅத்து முறைகளும் நபி (ஸல்) அவர்களிடம் இருந்து கீழ்க்கண்ட எட்டு ஸஹாபிகளும் கற்றுக் கொண்ட கிராஅத் முறைப்படி தொகுக்கப்பட்டன.
1. உதுமான் இப்னு அஃப்பான் (ரலி)
2. அலி இப்னு அபீ தாலிப் (ரலி)
3. உபை இப்னு கஅபு (ரலி)
4. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி)
5. ஜைது இப்னு ஃதாபித் (ரலி)
6. அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)
7. அபுத் தர்தாஉ (ரலி)
8. உமர் இப்னுல் கத்தாபு (ரலி)

இவர்கள் அல்லாத மற்ற ஸஹாபாக்கள் ஓதிவந்த கிராஅத் முறைகள் அல்கிராஅத்துஷ் ஷாஃத்ஃதஹ் என்று கூறப்படும். இந்த இரண்டாம் வகைக் கிராஅத்துகளில் சில அரபு மக்களின் மொழிஉச்சரிப்புக் கேற்ற படி ஓதப்பட்டு வந்தன. இன்னும், சில குர்ஆனின் வார்த்தைகளின் பொருளை விளங்குவதற்காகக் குறிப்பிடப்பட்டு வந்தன. இவ்வகையைச் சார்ந்தது தான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘லியஃரிஃபூனி’ என்று ஓதிக் காட்டியது.

இந்த இரண்டாம் வகைக் கிராஅத்தான ‘அல்கிராஅத்துஷ் ஷாஃத்ஃதஹ்’வின் படி ஓதப்படும் குர்ஆன் வசனங்களைத் தொழுகையில் ஓதுவதும், இன்னும் திலாவத் எனும் குர்ஆனை ஓதும் பொழுதோ ஓதக் கூடாது. ஆயினும், அவ்வகைக் கிராஅத்துகளைக் குர்ஆனின் பொருளைக் கூறுவதற்காகவும், குர்ஆனின் மொழி, இலக்கண முறைகள் ஆகியவற்றைக் கற்கவும், கற்பிக்கவும், சட்டங்கள் தொடர்பான கருத்துக்களைப் பெறவும் இந்தக் கிராஅத்துகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது மார்க்க வல்லுநர்களின் ஒருமித்த கருத்தாகும்.

எனவே,
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ (الذاريات:56)
ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காக அன்றியே நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56) என்ற வசனத்தில், இப்னு அப்பாஸ் (ரலி) லியஃபுதுனி என்பதற்கு “லியஃரிஃபூனி” என்று ஓதிக்காட்டினார்கள் என்ற வார்த்தைக்கு அதன் வசனத்தின் பொருளை விளக்கிக் கூறுவதற்காக ஓதிக்காட்டினார்கள் என்று புரிய வேண்டும்.

தாங்கள் கூறுவதுபோல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பெயரால், அடித்து விடப்பட்டுள்ளது என்பது ஒரு வேளை உண்மையாக இருப்பினும், முஜாஹிது, இப்னு ஜுரைஜ் ஆகியோர் கூறிய விளக்கத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது தங்களது சொந்தக் கருத்து என நான் நினைக்கினேறேன்.

قال محمد بن إسحاق حدثنا أبان بن صالح عن مجاهد ، قال عرضت المصحف على ابن عباس ثلاث عرضات من فاتحته إلى خاتمته أوقفه عند كل آية منه وأسأله عنها .

وقال ابن جرير حدثنا أبو كريب ، حدثنا طلق بن غنام عن عثمان المكي ، عن ابن أبي مليكة قال رأيت مجاهدا سأل ابن عباس عن
تفسير القرآن ومعه ألواحه قال فيقول له ابن عباس اكتب حتى سأله عن التفسير كله . ولهذا كان سفيان الثوري يقول إذا جاءك التفسير عن مجاهد فحسبك به .

“நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் குர்ஆனை சூரா ஃபாத்திஹா முதல் அதன் இறுதி வரை மூன்று முறை ஓதிக்காட்டியுள்ளேன். அப்படி ஓதும்பொழுது, ஒவ்வொரு வசனத்திலும் நிறுத்தி நிறுத்தி அவர்களிடம் அந்த வசனத்தைப் பற்றிக் கேட்டுள்ளேன்”, என்று முஜாஹிது (ரஹ்) அவர்கள், கூறியதாக அபான் இப்னு ஸாலிஹு அவர்கள் கூறியதாக முஹம்மது இப்னு இஸ்ஹாக் அவர்கள் கூறுகின்றார்கள்.

“இன்னும், நான் முஜாஹிது அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் குர்ஆனின் விளக்கங்களைக் கேட்கக் கண்டேன். அவற்றை எழுதுவதற்கான பலகைகள் அவர்களுடன் இருந்தது. அப்போது, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், முஜாஹிது (ரஹ்) அவர்களிடம் எழுதிக் கொள்ளுங்கள் என்று கூறிக் கொண்டிருந்தார்கள். இவ்வாறே அவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் குர்ஆனின் விளக்கங்கள் முழுவதையும் கேட்டு எழுதிக் கொண்டார்கள்”. அறிவிப்பவர்-இப்னு அபீ முலைக்கா நூல் இப்னு ஜரீர்.

இதனால் தான் சுஃப்யானுஸ் ஸவ்ரீ (ரஹ்) அவர்கள், “முஜாஹிது அவர்களிடம் இருந்து குர்ஆனின் விளக்கங்க்ள் கிடைத்தால், உனக்கு அது போதும்”, என்று கூறுபவர்களாக இருந்தார்கள். இந்த அறிவிப்புகளும் இப்னு கஃதீர் விரிவுரையின் முன்னுரையில் குர்ஆனின் பொருளை விளங்குவதன் அடிப்படை விதிகள் பற்றிய இடத்தில் வருகின்றன.

இறைவனை வணங்குவது என்பது இறைவனைப் பற்றி அறியாமல் முழுமை பெறாது. ஆதலினால், “ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காக அன்றியே நான் படைக்கவில்லை” என்ற வசனத்தில் வரும் “என்னை வணங்குவதற்கு” என்ற வார்தைக்கு “என்னை அறிவதற்கு” என்று பொருள் கூறுவதில் தவறு காண இயலாது என்பது எனது கருத்து.

அல்லாஹ்வும், அவன் தூதரும் மிகவும் அறிந்தவர்கள்.

No comments:

Post a Comment